கனவு காணும் என் வாழ்க்கை

கனவில் நிறைய 
பேசினாய்
என்னுடன்
நிஜத்தில்
ஏனோ
ஒற்றை மெளனம் 
காத்தாய்.

கனவில் 
மடி கொடுத்தாய்
என் 
துயரங்களுக்கு
நிஜத்தில் ஏனோ
கருணை பார்வை மட்டும்
பார்த்து சென்றாய்.

கனவில் 
என் பக்கம் 
நின்றாய்
நிஜத்தில்
ஏனோ
தூரம் போனாய்.

கனவில் என்னுடன்
தாமி (Selfi)
எடுத்து கொ(ல்)(ள்)வாய்
நிஜத்தில்
ஏனோ என்னோடு
குழு புகைப்படம் கூட
எடுத்தது இல்லை

காண்பவை
எல்லாம்
நிஜமாய் போக
கனவே நீயும்
ஓர் நாள்
நிஜமாய் மாறு.

Comments

Popular posts from this blog

ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் தேவையில்லை IRCTC புதிய அறிவிப்பு

கண்ணீர்

மண நாள் பரிசு